எதிர்வரும் காலம் நமக்கு பொற்காலம் ! நம்மோடு கூட்டணி வைக்க ஓடோடி வருவார்கள் அதுதான் எதிர்வரும் தேர்தல் களம்!

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

1
Published: 27 Sep 2023

தமிழகத்தில்… தூத்துக்குடி ,திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ,தேனி ,திண்டுக்கல் , திருவாரூர் ,சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை,நாகப்பட்டினம், கரூர்,திருச்சி,பெரம்பலூர், நாமக்கல் 15 நாடாளுமன்ற தொகுதியில் அடர்த்தியாக தேவேந்திரகுல வேளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்கள்தான் மேற்கண்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்யும் சக்தியாக உள்ளார்கள் .

அனைவரும் ஒரு கொடியின் கீழ் ஒரு கொடையின் கீழ் ஒரு தலைமையின் கீழ் ஒரு தலைவன் கீழ் அணி திரண்டால் நம்மோடு கூட்டணி வைக்க தேசிய கட்சிகளும் ,மாநில கட்சிகளும் அலை மோதி கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் மைக் பிடித்தவன் எல்லாம் தலைவர் தினம் தினம் தலைவர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள் இந்த நிலையை மாற்றி சிந்திக்க தொடங்குங்கள்.

யாரால் இந்த சமூகத்திற்கு குரல் கொடுக்க முடியும் ?யாரால் இழந்த அடையாளத்தை மீட்டிருக்கிறோம் ? யாரால் பாதுகாப்பாக வாழ்கிறோம் ? யாரால் முதன்முறையாக சிகப்பு பச்சை கொடியை சட்டமன்றத்திற்குள் கொண்டு செல்ல முடிந்தது ?யாரால் பட்டியல் வெளியேற்ற போர் பயணத்தை உலகறிய செய்ய முடிந்தது? யாருடைய குரல் வலுவான குரலாகவும் ,வலிமையான குரலாகவும் நியாயமான குரலாகவும் நேர்மையான குரலாக ஒலிக்கிறது. யார் பின்னால் சென்றால் இந்த சமூகம் முன்னேறும் ? எந்த தலைமை சிறந்த தலைமை ?என்றெல்லாம் சிந்திப்பது கிடையாது அவனும் நம்ம ஆளு இவரு நம்ம ஆளு என்று மாறி மாறி தேர்தல் காலங்களில் தவறாக வாக்களித்து திராவிட கட்சிகளின் வளர்ச்சி தான் பயன்பட்டார்களே தவிர தான் பிறந்த சமூகத்திற்கு ஒருபோதும் பயன்பட்டது இல்லை .

எதிர் வருகின்ற 2024 & 2026 தேர்தலில் நாம் நமக்கான தலைமையை தேர்வு செய்து நாமெல்லாம் ஒரு அணியாகத் திரண்டு நின்றால் ஓடோடி நம்மை வந்து ஆரத்தழுவி கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள். இது தெரியாமல் கூட்டணி யாருடன் யாருடன் என்று புலம்பி தீர்ப்பது காலத்திற்கு ஒவ்வாது.

ஆளுங்கட்சி, ஆண்ட கட்சிகள் என எல்லோரும் பிரிந்து இருக்கிறார்கள் .நாம் ஒருங்கிணைந்து புதிய தமிழகம் கட்சி தலைமையில் அணிவகுத்து நின்றால் ஆட்சியதிகாரம் நம் கையில் வசப்படும் .பட்டியல் வெளியேற்றம் முதல் கையெழுத்து, பூரண மதுவிலக்கு, ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி . அனைவருக்கும் ஆன ஆட்சி நடக்கும் .

ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு சம நீதி ,சம பங்கு, சம உரிமை, சமத்துவம் என்ற உயரிய சித்தாந்தத்தை நிலை நிறுத்துவோம் . இந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டுமே தவிர தேர்தல் கூட்டணிக்காக ஏங்குவது கூடாது.

நாம் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல சிதறி கிடக்கின்ற நம் சமுதாய மக்களை ஒரு தலைமையின் கீழ் அணி திரட்டுவோம்!
இழந்த ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுப்போம்!.
டாக்டர் அய்யா தலைமையை வலுப்படுத்துவோம் !
புதிய தமிழகம் படைப்போம்.!!

வாழையூர் குணா