திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய அரசு மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்ட வேண்டும்!
1 Views

![]()
திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய அரசு மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்ட வேண்டும்!
வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்!
………………………………….
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகியதால், திடீரென போய்கி, கோசி, திரிசூலி ஆகிய நதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பெருமளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இதில், தமிழகத்திலிருந்து நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்ட 300-க்கும் மேற்பட்ட பயணிகள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற திடீர் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் வெள்ளப்பெருக்குகளில் இருந்து மக்களை மீட்பதற்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகளும் பின்பலமும் நேபாளம் போன்ற நாடுகளுக்கு இல்லை.
எனவே, மனிதநேய அடிப்படையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவி நடவடிக்கைகளையும், தேவைப்பட்டால் மீட்புப் பணிகளுக்காக இந்தியத் துணை ராணுவத்தை அனுப்பவும், வெள்ளப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கு இந்திய அரசின் ஹெலிகாப்டர்கள் உட்பட அனைத்து விதமான உதவிகளையும் நேபாள அரசுக்கு வழங்க வேண்டும் எனவும்; வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.08.2026





