வெள்ளிவிழா நிறைவு சிறப்பு மாநாடு – தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள் ஆற்றிய தலைமை உரை
புதிய தமிழகம் கட்சியின் 25 ஆண்டுகால வெற்றிப்பயணத்தை நினைவு கூறும் வகையில் 2022 டிசம்பர் 15 அன்று விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் – அழகாபுரியில் சம நீதி – சமூக நீதி – சமய நீதியை வென்றெடுக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள்; ஆன்மீகப் பெரியோர்கள்; தோழமை கட்சிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு நிறுவனர் & தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அம்மாநாட்டில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் சியாம் கிருஷ்ணசாமி அவர்கள் எழுச்சியுரையும்; விஷ்வ இந்து பரிஷத் தலைவர் திரு.S வேதாந்தம் ஜி அவர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் திரு.சடகோப ராமானுஜர் அவர்களும், தமிழ்நாடு விஷ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் மற்றும் நாக சக்தியம்மன் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனர் திரு. ஜெகத்க்குரு குரு பாபுஜி சுவாமி அவர்களும் ஆகியோர் ஆசியுரையும்; முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக துணைப் பொதுச் செயலாளர் திரு நத்தம் ஆர்.விஸ்வநாதன் அவர்களும், முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் திரு கே.டி. ராஜேந்திர பாலாஜி அவர்களும், சட்டமன்ற உறுப்பினர் – அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் கடம்பூர் செ.ராஜூ அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழ கருப்பையா அவர்களும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் நிறுவனர்-தலைவர் திரு.தி. தேவநாதன் யாதவ் அவர்களும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் – தலைவர் திரு.உ.தனியரசு அவர்களும், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் திரு. N. R.தனபாலன் அவர்களும், பாஜக மாநில துணைத் தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களும், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் திரு.ரவி பச்சமுத்து அவர்களும், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில தலைவர் திரு M.A.சூசை அவர்களும், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் & தலைவர் திரு.கே.சி.திருமாறன் ஜி அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திருமதி மா. திலகபாமா அவர்களும், தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்க தலைவர் திரு. A . கணேசன் அவர்களும், தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன சங்கத் தலைவர் திரு எம். தங்கராஜ் அவர்களும், தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்க மாநில இளைஞரணித் தலைவர் எம். சிவலிங்கம் அவர்களும் கலந்து வாழ்த்துரையும் வழங்கினார்கள்.
நிறைவாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் & தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள் ஆற்றிய தலைமை உரையின் முழு விபரம் பின்வருமாறு:
புதிய தமிழகம் கட்சியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவு மாநாட்டில் திரளாகக் கலந்து கொண்டிருக்கக்கூடிய என்னுடைய அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே! சகோதரிகளே! பெரியோர்களே! இளைஞரணி நண்பர்களே!! அனைவருக்கும் என்னுடைய மாலை நேர வணக்கம்.!!
நேற்று பெய்த மழையில் இந்த மாநாட்டு இடம் நனைந்து வெள்ளக்காடாகி, உள்ளே வாகனங்கள் வரமுடியாத அளவிற்கு சேதமாகி விட்டது. இன்றும் ஒருவேளை அது போல மழை வந்திருந்தால், இந்த மாநாடு இவ்வளவு சிறப்புற நடந்திருக்குமா? என்பது தெரியாது. இந்த மண் பெற்றெடுத்த பிள்ளைகள் நாம். எனவே, எந்தத் தாயும் எந்தப் பிள்ளைக்கும் துரோகம் இழைக்காது. அந்த வகையிலே தேவேந்திரகுல வேளாளர் மக்களை பெற்றெடுத்தது இந்த பூமி – இயற்கை – மழை. நமக்கு இன்று முற்றாக ஒரு சொட்டு மழை கூட இல்லாமல் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநாடு நடத்துவது என்று முடிவு செய்து விட்டோம். ஆனால், அதற்கான பணிகளைத் துவக்குவதற்காகத்தான் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி விருதுநகரில் ஆர்ப்பாட்டம், அதன்பிறகு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்; அதற்குப் பிறகு தென்காசி, திருநெல்வேலி, தூத்து
அதேபோல இவ்வளவு பேரும் 9 மணி வரை உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பசியை அடக்குவதற்கு நல்ல உணவை நம்முடைய கிருபை ராஜ் அவர்களும், ராஜேந்திரன் அவர்களும், கண்ணன் அவர்களும் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களும் செய்து கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதுமட்டுமல்ல, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் அவர்கள், இராஜேந்திர பாலாஜி அவர்கள், கடம்பூர் ராஜூ அவர்கள், பாபுஜி அவர்கள் மற்றும் மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் மாநாடு மிகப்பெரிய வெற்றியடைந்து விட்டது என்று மனப்பூர்வமாகப் பாராட்டுகிறார்கள். அண்ணன் பழ. கருப்பையா அவர்கள், வேதாந்தம் அவர்கள் கடல் போல ஒரு கூட்டம் எனப் பிரமித்தார்கள். எனவே இந்த மாநாடு இவ்வளவு வெற்றிகரமாக அமைவதற்கு இங்குப் பேசிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் அவர்கள் புதிய தமிழகம் கட்சியின் மீது வைத்திருக்கக்கூடிய அன்பிற்கும், பற்றுக்கும், என்
கடந்த ஒரு மாத காலமாக நம்முடைய அனைத்து மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் உட்பட அனைவரும் 25 ஆண்டுகால சாதனையை விளக்கக் கூடிய வகையில் இத்தனை நாட்கள் இல்லாத அளவிற்கு, நம்முடைய கட்சியை மக்கள் மத்தியிலே சுவரெழுத்து பிரச்சாரங்கள், சுவரொட்டிகளாக,
நீங்கள் அனைவரும் வந்திருக்கும் தலைவர்கள் வாழ்த்தியதை நீங்கள் மிகவும் கவனமாகக் கேட்டு இருப்பீர்கள். எவரும் மேடைக்கு வந்து ஒப்புக்காக – முகஸ்துதிக்காக வாழ்த்த வந்தவர்கள் அல்ல! நம்முடைய கட்சியை உன்னிப்பாகக் கவனித்த காரணத்தினால்தான்; நம்மோடு பயணித்த காலத்திலே அவர்கள் நமது நல்ல பழக்க வழக்கங்களை நேரில் கண்ட காரணத்தினால் தான்; நான் சட்டமன்றத்தில் குரல் கொடுத்த அந்த நல்ல அம்சங்களின் வெளிப்பாடுகளின் காரணம் தான். ஆழ்மனதிலே இருந்து பாராட்ட இன்று இந்த மேடையிலே அவர்களை இவ்வளவு நேரம் அமர வைத்திருக்கிறது. ஏதோ அழைத்தார்கள் எனவே, மேடையிலேயே 5 நிமிடம் பேசி விட்டோம் என்று புறப்பட்டுப் போய் இருக்க முடியும். ஆனால், அவர்கள் அப்படிப் போகவில்லை. அவர்கள் நம்மோடு இரண்டற கலந்து விட்டார்கள். இதுதான் இந்த மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பல சமுதாயத்தின் தலைவர்கள், ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் ஏதாவது ஒரு சமுதாயத்தினுடைய பின்னணியை வைத்தே அரசியல் இயக்கங்களை துவங்கியிருப்பார்கள். இரண்டு, மூன்று கட்சிகளைத் தவிர, அனைத்து கட்சியினுடைய வரலாறுகளும் அப்படித்தான் இருக்கும். ஆனால், இன்று பல்வேறு சமூக இயக்க்த்தினரும், அரசியல் கட்சியினரும் நமது மேடையிலே வந்து வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். அப்படி என்று சொன்னால் நாம் கடந்த 25 ஆண்டு காலமாகச் சரியான பாதையிலேயே பயணத்தை இருக்கிறோம் என்று பொருள். இனிமேல் எப்படிப் பயணிக்க வேண்டும். நம்முடைய பயணம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நம்முடைய புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்கள் நிர்வாகிகள் தயவு கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே ஆவணப்படத்தை காட்டினார்கள் எந்த இடத்திலேயும் ஒரு சம்பவம் கூட அரசியல் ரீதியான சம்பவங்கள் கிடையாது; ஏதாவது ஒரு பிரச்சனையில் நாம் சம்பந்தப்பட்ட அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய வகையிலே ஈடுபட்ட நினைவுகள் தான் வந்திருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய பெரும்பாலான இளைஞர்கள் 25 வயதிற்கு குறைவானவர்கள். அவர்களுக்கு 1995 க்கு முன்பு தமிழகம் எவ்வாறு இருந்தது? அவர்களது பெற்றோர்கள், மூதாதையர்கள் எப்படி இருந்தார்கள்?; எவ்வளவு இன்னல்கள் பட்டார்கள்? என்பது அவர்களுக்குத் தெரியாது. அதன் காரணமாகவே தான் இளைஞர்கள் பலர் பேர் நம்முடன் இன்னும் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதை நான் அறிகிறேன்.
1990 காலகட்டங்களில் நான் தூத்துக்குடி, திருநெல்வேலி, தெ
இந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு, இந்த மக்களைத் தேடி வந்து ஆதரவு கரம் நீட்டுவதற்கு, அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு அன்று யாரும் இல்லை? புதிய தமிழகம் கட்சி மட்டுமே அன்று மக்களை நாடிச் சென்றது. எல்லாமே வெற்றிடமாக இருந்தது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் நான் சுற்றுப் பிரயாணம் செய்கிறேன் என்று சொன்னால் இராமநாதபுரத்தில் கமுதி, கடலாடியில் ஒலி பெருக்கி அமைத்து விடுவார்கள். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள், நான்கு நாள் கூட தொடர்ந்து ஒலி பெருக்கி அமைத்து இருந்த நாட்கள் உண்டு. எந்த கிராமத்தையும் விட்டுவிடவில்லை. அனைத்து கிராமங்களுக்கும் சென்று தான் புதிய தமிழகம் கட்சியைத் தென்தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இன்னொரு ஒரு மிக முக்கியமான விசயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 25 வருடத்தில் எந்த ஒரு சூழலிலும் என்னுடைய நலனுக்காகவோ, குடும்ப நலனுக்காகவோ எந்தக் கொள்கையிலும், எடுத்துக் கொண்ட கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனையில் ஒரே ஒரு வார்த்தை மாறி இருந்தால் போதும் தேயிலைத் தோட்டத் தொழில் அதிபர்கள் அனைவரும் கோடி கோடியாகக் கொண்டு வந்து கொட்டி இருப்பார்கள். ஆனால், வரலாற்றில் நாம் அன்று யாருக்கும் தெரியாது என்று அந்த தவற்றைச் செய்து விடலாம். ஆனால் வரலாற்றுக்குத் தெரியாமல் போய் விடாது. என்றாவது ஒருநாள் தெரிந்துவிடும். அதுதான் வரலாறு. அதன் காரணமாகத்தான் நான் எந்த ஒரு பிரச்சனையை தொடுவது என்று சொன்னாலும், அந்த பிரச்சனையில் தலையிடலாமா? வேண்டாமா? தலையிட்
1975ஆம் ஆண்டு நான் மதுரை மருத்துவக் கல்லூரியில் அப்போது என்னை நெல்லை மருத்துவக் கல்லூரியிலிருந்து மாற்றம் செய்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். 75ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பீகாரில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கு நிதி நிவாரண நிதி திரட்டியதற்காக இந்திராகாந்தி பரிசளித்தார். 25ஆம் தேதி அக்டோபர் மாதம் நான் மதுரை மருத்துவக் கல்லூரியில் வந்து சேர்ந்து விட்டேன். 76 ஆண்டு ஜூலை மாதம் நான் மிசாவிலே கைது செய்யப்பட்டேன். எதற்காக என்று சொன்னால் உங்களில் பல பேருக்கு மிசா என்றால் என்னவென்றே தெரியாத மிசா என்றால் Maintenance of Internal Security Act என்று தடா சட்டம் – பொடா சட்டத்தைப் போல, 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி இந்தியாவில் ஒரு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது இந்தியாவிலிருந்த அரசியல் கட்சியினுடைய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அப்பொழுது மாணவ பருவத்திலே மாணவ, மாணவிகளை எல்லாம் திரட்டி மாணவர்களிடத்தில் ஒரு அமைப்பை வைத்து இருந்த காரணத்தினால், வடக்கு மாநிலங்களில் கட்டாய கருத்தடைகள் செய்யப்பட்டது என்ற கருத்தைக் கேட்டறிந்து, கட்டாய கருத்தடை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி நோட்டீஸ் விநியோகம் செய்ததை அடிப்படையாக வைத்து என்னை கைது செய்து, என்னை உள்ளே வைத்தார்கள்.
நான் ஜூலை மாதம் உள்ளே சென்றேன். என்னைப் பார்ப்பதற்காக என்னுடைய தாயார், தந்தை, அண்ணன், தங்கை
2011 ஆம் ஆண்டு மே மாதம் அதிமுக கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளே சென்றேன். பரமக்குடியில் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அதிலேயே 7 பேர் மரணம் எழுதிவிட்டார்கள். அதையெல்லாம் இங்கே தம்பி தனியரசு சுட்டிக் காட்டுவார் என்று இருந்தேன். அந்த கலவரத்திற்கும் புதிய தமிழகம் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அது யாராலோ, எதற்காகவோ உருவாக்கப்பட்டது. சட்டமன்றத்தி
எனவே, ஒரு அரசியல் கட்சியை நடத்துவதில் தலைவருக்கு மட்டுமல்ல, கட்சியினுடைய நிர்வாகிகள் அனைவருக்கும் இந்த உறுதியும், பொறுப்பும், கடமையு
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், நான் கிராமந்தோறும் செல்லுகின்ற போதெல்லாம் தாய்மார்கள், இளைஞர்கள், பெரி
இன்று நான் அதற்காகவும் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரோடு நாம் கூட்டணியிலேயே 2021-ல் இருக்க முடியவில்லை. கூட்டணி என்பது வேறு. வரலாற்றிலே அரசியல் ரீதியாக சில காரணங்களால் நாம் கூட்டணி சேரலாம்; சேராமல் இருக்கலாம். ஆனால், ஒரு பெரிய தமிழ்ப் புலவர் அல்லது தமிழ் அறிஞர் என்று சொல்லக்கூடியவர்கள் புரிந்துகொள்ளாததை ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரிந்து கொண்டு வெறும் வார்த்தையாக இல்லாமல், எழுத்தாக்கி, மத்திய அரசோடு துணை நின்று பள்ளர், குடும்பர், காலாடி, பண்
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். 1971இல் கோவையிலே நூற்றுக்கு மேற்பட்ட நூற்பாலைகள் இருந்தது. நூற்பாலையில் வேலை செய்யக்கூடிய அந்தத் தொழிலாளர்களுக்குத் தான் அதிகமான மரியாதை அவருக்குத்தான்; போட்டிப் போட்டுக்கொண்டு பெண் கொடுப்பார்கள். தீபாவளி என்றால் அவர்களிடத்தில் தான் 5000, 10000 என பணம் புழங்கும். அப்படியெல்லாம் கொடிகட்டிப் பறந்த நூற்பாலைகள், காணாமல் போய்விட்டன. இப்பொழுது ஒரு புதிய வர்க்கம் ஐ.டி என்ற ஒரு வர்க்கம் தான் புதிதாக வளர்ந்து வருகிறார்கள்.
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். பெரிய வசதியிருந்தவர்கள் எல்லாம் அடிபட்டு விட்டார்கள். இது தேவேந்திரகுல வேளாளர்கள் அல்லது நெசவாளர்கள் இருந்தாலும், விஸ்வர் கர்மா சமூகமாக இருந்தாலும், அவர் நாடாராக இருந்தாலும், யாதவராக இருந்தாலும், தேவராக இருந்தாலும், எந்த சமுதாயமாக இருந்தாலும் அவைகளெல்லாம் கீழே விழுந்து கிடக்கிறன்றன. 10 முதல் 30 சதவீ
அடுத்து 26வது ஆண்டிளே எடுத்து வைக்கிறோம். இந்த நிலையில் மீண்டும் சமுதாய பிரச்சனையை பேசுவதற்கோ, அந்த ஊரில் ஒரு சம்பவம் நடந்து விட்டது; இந்த ஊரில் ஒரு சம்பவ நடந்து விட்டது என்று பேசிக்கொண்டு இருப்பதற்கு நேரம் இல்லை. உகந்த காலமும் இல்லை. இப்பொழுதே நமக்கு மிகப்பெரிய தலையாய பிரச்சனை – லட்சியம் – கோரிக்கை சித்தாந்த ரீதியாக வந்து இருக்கிறது. இனி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமே ஒரு விடிவு காலத்தை உருவாக்கித் தர வேண்டிய பொறுப்பு புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்கள் அனைவருடைய தலையிலும் சுமத்தப்பட்டு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அதைத்தான் பல பேர் பேசினார்கள். அதைத்தான் அண்ணன் பழ.கருப்பையா அவர்கள் கூடச் சொன்னார்கள். ஒரு சமூகத்தினுடைய தொண்டனுக்கு சில நேரங்களில் சில பிரச்சனைகள் வரலாம். எந்த அரசியல் கட்சிக்கு வராமல் இருக்கிறது. காந்தி இந்தியச் சுதந்திரத்திற்காக பாடுபட்டார், அவருக்கு பிரச்சினை வரவில்லையா? அம்பேத்கர் அவர்கள் இந்த நாட்டினுடைய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பாடுபட்டார், அவருக்கு தொல்லைகள் வரவில்லையா? துன்பங்கள் வரவில்லையா? புரட்சியின் மூலமாக இந்த நாட்டை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜப்பான், ஜெர்மனி சென்று இந்திய தேசியப் படையைக் கட்டிய சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்குப் பிரச்சனைகள் வரவில்லையா? இந்த நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக வ.உ.சி அவர்களுக்குச் சொத்து சுகம் இல்லாமல் இருந்து செக்கு இழுக்க வேண்டிய சூழல் வரவில்லையா? பாரதியார் கவிதை பாடியதற்காக ஊரை விட்டு நாடு நாடாக ஓட வேண்டிய அவசியம் வரவில்லையா? எனவே யாருக்கு பிரச்சனை வரவில்லை. எல்லோருக்கும் பிரச்சனை வந்துள்ளது. ஆனால், அன்று இருந்த பிரச்சனைகள் இன்று அல்ல. இனிமேல் காலகட்டம் மாறிவிட்டது. வேறு வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். வாட்ஸ்–அப், பேஸ்புக் மூலமாக எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியாது. எனவே புதிய தமிழகத்தினுடைய தொண்டர்கள், நம்முடைய நிர்வாகிகள் நமக்கு ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, நாம் தலைமை ஏற்று இந்த தமிழ் சமுதாயத்திற்குப் பொறுப்புணர்வுடன் உழைக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
இந்த மாநாடு இன்னும் கூட சிறப்பாகப் பண்ணியிருக்க முடியும். நான் இந்த மாநாடு அறிவித்தபோது உங்களிடத்தில் எல்லாம் யாரிடத்திலும் எக்காரணம் கொண்டும் நிதி வசூல் செய்யக்கூடாது. நம்முடைய கட்சிக்காரர்களே இந்த மாநாட்டை நிதி திரட்டி நடத்த வேண்டும் என்றுதான் 450 பேர் கொண்ட குழுவை உருவாக்கினோம். அதேபோல மாநாட்டு வரவேற்புக் குழு அறிவித்தோம். மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை. அதேபோல உறுப்பினராக இருக்கக் கூடியவர்களுக்கு ஒரு தொகை குறிப்பிட்டோம். ஆனால், நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என்றும் இல்லாத அளவில் சுவர் எழுத்து விளம்பரங்களை நீங்கள் செய்திருக்கிறீர்கள். கிராமம் தோறும் வாகனங்களைப் பிடித்து வர வேண்டிய சுமை இருக்கிறது என்பது தெரியும். இருந்தாலும் கூட நம்முடைய கஷ்டத்தை நாமே தீர்ப்பதில் இருக்கக்கூடிய பெருமையும், இன்பமும் வேறு எதுவும் இருக்க முடியாது. இப்பொழுது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நீங்கள் பல இடத்தில் சென்றீர்கள். நாம் ஒரு சில லட்சங்களை திரட்டுவதற்கு எவ்வளவு கடினப்பட்டோம் என்பது தாங்கள் நன்றாக அறிந்தோம். நாம் நாம் ஒரு லட்சம் எதிர்பார்த்தோம், பத்தாயிரம் கொடுத்து இருந்தாலும் சரி. பத்தாயிரம் ரூபாய் எதிர்பார்த்து ஆயிரம் கொடுத்து இருந்தாலும் சரி. அவர்கள் அனைவருக்குமே மாநாடு முடிந்தவுடன் தொண்டர்கள் சென்று நன்றி தெரிவிக்க வேண்டும். நான் ஏன் இந்த சமயத்தில் சொல்கிறேன் என்றால் புதிய தமிழகம் கட்சிக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும், கட்சிகளுக்
ஆட்சிக்கு வந்தவுடன், மாதத்திற்கு ஒருமுறை எடுக்கக்கூடிய மின்சார கட்டண அளவீட்டை மாதத்திற்கு ஒரு முறை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். அந்த கோரிக்கை என்ன ஆயிற்று? அதற்கு மாறாக மின்சார கட்டணத்தை இரண்டு மடங்காக்கினார்கள். கடந்த ஒருவாரத்திற்கு முன்பாக என்னிடத்தில் கோவை, சூலூர், சோமனூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 20க்கு மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். இன்று இருக்கக்கூடிய உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் குறைக்கப்பட வில்லை என்றால் ஏறக்குறைய 5 – 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடிய அபாயம் இருக்கிறது என்று சொன்னார்கள். சோமனூர், பல்லடம், ஈரோடு பகுதிகளில் இருக்கக் கூடிய விசைத்தறி ஆலைகள் மூடப்படும் நிலை இருக்கிறது என்று சொன்னார்கள். இந்த விசைத்தறி தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை இன்றைய ’திராவிட ஸ்டாக்கிஸ்ட்’ ஆட்சியாளர்களுக்குச் செல்லவில்லையா?
ஒரு பக்கம் சகோதரி, ஒரு பக்கம் மகன் ஊர் ஊராக சென்று, ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று சொன்னார்களே, மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கிறதா? இதுவரையிலும் சாலையிலே பால் கொண்டு போகும் வண்டி வந்தால் அவசரம் என்று போகும். மருத்துவ ஆம்புலன்ஸ் அவசரம் என்று போகும். ஆனால், இன்று அவற்றிற்கெல்லாம் அவசரமில்லை. ”டாஸ்மாக் வாகனங்களுக்கு தான் அவசரம்” என்று போஸ்டர் ஒட்டி செல்கிறது. இதுதான் இன்றைய ஆட்சியில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றம். ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை வந்து சேரவில்லை; முதியோர்களுக்கான பென்சன் தொலை 1000 லிருந்து 1500 ஆக உயரும் என்று சொன்னார்கள். அதுவும் போய் சேரவில்லை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவருடைய சம்பள உயர்வு, பழைய பென்சன் முறை வரும் என்று கூறினார்கள், வரவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறை அமலாக்கப்படும் என்று சொன்னார்கள் கேட்டால் நிதி இல்லை என்று ஒரே கூப்பாடு. ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அதைப் பற்றி வாய் திறக்க இன்று ஆளில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் தமிழக மக்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். சாலைகள் போடாமல் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் தொடங்கப்பட்ட திட்டங்களை இப்போது அமலுக்கு வரும்போது திறந்து வைத்து பெருமை கொள்கிறார்கள். புதிய திட்டங்கள் அப்பா பெயரில் வருகிறது; பேனா வருகிறது; நூலகம் வருகிறது. கடலுக்குள்ளே எப்படி எழுத முடியும் என்பது தெரியவில்லை. 136 அடிக்குப் பேனா ஒரு புயல் வந்தால் அந்தப் பேனா நிற்குமா? நிற்காதா? என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு நூறு கோடி ரூபாய்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட, தமிழக மக்கள் ஏமார்ந்து இருக்கிறார்கள்; பெண்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். நகைக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும்; கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். செய்யவில்லை. இப்படி வஞ்சிக்கப்பட்ட எல்லா மக்களையும் புதிய தமிழகம் கட்சியினர் வீடுவீடாக சென்று 2021 திராவிட மாடல் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டதை எடுத்துரைக்க வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றிடவும்; 2026-ல் ஆட்சி மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லக்கூடிய ”திராவிட மாடல் என்ன” என்பதை அம்பலப்படுத்த வேண்டும். இந்த மைக்கை ஒரு முன்மாதிரி என்று சொன்னால் எல்லா இடத்திலும் இதே போல ஒலி எழுப்ப வேண்டும். இங்கே பேசினாலும் சரி, ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரத்துக்குள் பேசினாலும் சரி, விருதுநகரில் பேசினாலும், மதுரையில் பேசினாலும் அல்லது வேறு நாட்டிற்கு கொண்டு சென்றாலும் இந்த மாதிரி பேச வேண்டும் அதுதான் மாடல். அப்படி என்ன மாடல் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்? அதுபோல என்ன மாடல். இட ஒதுக்கீடு இன்று வந்தது அல்ல. மஹாராஷ்ட்ரத்திலே இட ஒதுக்கீட்டுக்காக ஜோதிபா புலே 1920 முன்பாகவே போராடியிருக்கிறார்; இட ஒதுக்கீடும் பெற்று இருக்கிறார். ஆங்கிலேயர்கள் அவர்களாகவே முன்வந்து சீக்கியர்களுக்கு, இஸ்லாமியர்
இரண்டு பெரிய கட்சிகளை தாண்டி என்று 25வது ஆண்டு விழாவை கொண்டாடியது என்றால் அது நம்முடைய கட்சிதான். காரணம் நாம் என்ன கொள்கை எடுத்துக்கொண்டோமோ, அந்த கொள்கையில் உண்மையாக உறுதியாக நின்றது. இந்த கட்சி 50 ஆண்டுகளை நிறைவு செய்ய வேண்டும்; 75 ஆண்டு காலம் ,100 ஆண்டு விழாவை நிறைவு செய்ய வேண்டும். அதனை நானே இருந்து தான் 50, 75 ஆம் ஆண்டு விழா நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் 25 வருடத்திற்கு முன்பு, மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை என்ற லட்சியங்களை உள்ளடக்கி, இந்த மண்ணிலே பிறக்கக்கூடிய ஒவ்வொருவரும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். அதனை நல்ல முறையில் வாழ்வதற்கான வசதிகளை அரசுகள் செய்திடல் வேண்டும். பிறப்பிலே ஏழையாகப் பிறந்தாலும் கூட வளர்ப்பிலே வசதி படைத்தவனாக மாற்றப்படவேண்டும்; பிறப்பிலேயே கல்வி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் அவனுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்; பிறப்பிலே அவன் விளிம்பு நிலை சமூகத்தில் பிறந்து இருந்தாலும் அவன் மத்திய நிலைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே நமது குறிக்கோள். எனவே, equality and equity சமூக நீதி, சமத்துவம், சமய நீதி என்ற அடிப்படையில் எல்லோருக்கும் எல்லாம் சென்றடைய வேண்டும் என்ற உயரிய லட்சியம் தான் பொதுவுடைமை, பொது உரிமை இலட்சியம். அந்த லட்சியத்தை எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற அந்த உயர்ந்த எண்ணத்தோடு புதிய தமிழகம் கட்சியினர் செயலாற்ற வேண்டும். நம்முடைய நலனை மட்டும் பார்த்தால் போதாது. நீங்கள் தற்போது ஆவணப்படம் பார்த்ததில் காட்சிப்படுத்தப்பட்டவை எல்லாம் வரலாற்றுச் சம்பவங்கள். இன்று நடப்பவைகள் அல்ல, இன்று நடப்பவைகள் என்ன? அரசியல் சுரண்டல்கள், தமிழ்நாட்டில் ஒரே ஒரு குடும்பம் எத்தனை பொய்களை 505 வாக்குறுதிகளைக் கொடுத்து, தமிழ் சமுதாயத்திற்காகப் பாடுபட்டதாக கூறி கடைசியில் ஒரு கட்சி மட்டும் இப்பொழுது ஒட்டுமொத்த ஆட்சி – அதிகாரத்தையும் ஒரு குடும்பம் தன்னை வளர்த்துக்கொள்ள பயன்படுத்துகிறது. ரியல் எஸ்டேட் தொழிலை ஜி-ஸ்கொயர் தவிர எவரும் போட முடியவில்லை. சினிமா படம் எடுத்தால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தவிர எவரும் தாண்டிச் செல்ல முடியவில்லை. ஆட்சியிலே எல்லாம் சமையலறைக்குள் மருமகன், மகன், மனைவி என இவர்களுடைய உத்தரவிலே நடைபெறுகிறது. காவல்துறை அதிகாரி நியமனம், மாவட்ட ஆட்சியர் நியமனம் என அனைத்து சமையலறை உள்ளுக்குள்ளேயே நடக்கிறது. இதற்காகவா காந்தி போராடினார்? நேரு போராடினார்? சுபாஷ் சந்திரபோஸ் போராடினார்? இதற்காகவா எல்லோரும் போராடினார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்களால் ”ஒரே குடும்பம் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும்” என்பதற்காகவா அரசியல் சாசனம் கொண்டுவரப்பட்டது?
ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சியில் இருக்க; ஒரு குடும்பத்தால் மட்டுமே முன்மொழியப்படக்கூடிய அவர்களின்
எனவே, நம்முடைய பணி 25 ஆண்டுகால ஒட்டுமொத்தமாகச் சாதனைகளை நிகழ்த்திய நாம் அடுத்த பாய்ச்சலுக்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே நம்முடைய புதிய தமிழகம் கட்சி என்பது நம்முடைய மக்கள் என்பது எல்லோரும் இரண்டற கலக்க வேண்டும். அனைவரும் நம்மை வாழ்த்தி இருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்னவென்று சொன்னால், ஒரு காலத்தில் 1985 வரையிலும் ஒரு கிராமத்தில் ஒரு பகுதியில் ஜாதி மற்றும் மத மாற்றம் நடைபெறும் என்றால் அவர்களுக்கு ஒரே தீர்வு; தங்கள் மதம் மாறுகிறோம் என்று தான் அறிக்கை வரும். 1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் நிகழ்ச்சிக்கு நான் வந்து கால் வைத்த பிறகு, தமிழ்நாட்டில் இன்று வரை தென் மாவட்டங்கள் மட்டுமல்ல, வட மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கூட ஒட்டு மொத்தமாக மதமாற்றம் நடைபெறவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். விருப்பப்பட்டால் நீ இயேசுவைக் கும்பிடு, அல்லாவைக் கும்பிடு அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்த ஜாதியில் பிறந்து விட்டு, எனக்கு ஆபத்து வருகிறது; எனக்கு கை கொடுக்க எவருமில்லை; கொடுக்க எவரும் இல்லை என்ற அந்த குறை இல்லாத அளவிற்கு அந்த இடத்தை புதிய தமிழகம் கட்சி நிரப்பி இருக்கிறது. இங்குப் பல பேருக்குத் தெரியாது. 1982ல் இங்கு இருக்கக்கூடிய தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மீனாட்சி புரத்தில் வெறும் கோவிந்தன் என்ற ஒரு ஓட்டுநர் ஒரு பெண்ணை கூட்டிச் சென்று விட்டார். அவரால் அந்த கிராமத்தில் இருக்க முடியவில்லை. அவர் கேரளா சென்று வேறு மதம் மாறி வந்தார். மதம் மாறி வந்த பின்னும் பிரச்சனை. அவருக்காக 50 குடும்பங்கள் மதம் மாறினார்கள். அந்த 50 குடும்பங்களுக்காக 1980
நாங்கள் 25 வருடத்தில் சாதனைகள் படம் எடுக்க வேண்டிய நிலைகள் என்னவென்றால், பல தொழிற்சங்கங்கள் போராட்டம் வைப்பார்கள். 100 கேட்பார்கள் ஐந்து ரூபாய் உயர்த்தி கொடுத்து விட்டால் ’வெற்றி வெற்றி’ என்று போஸ்டர் ஒட்டிக் கொள்வார்கள். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு 1998-க்கு முன், அதிகபட்சம் 65 ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால், புதிய தமிழகம் கட்சி 1998-99 போராட்டத்தின் வாயிலாக 50 ரூபாய் அதிகரிக்கப்
1997-ல் சட்டமன்றத்திலே வெள்ளை அறிக்கை கேட்டுப் போராடினேன். 98-ல் அண்ணன் விஸ்வநாதன் இடைத்தேர்தலில் வென்று வந்தார். அன்று இருந்த அவருக்கு நான் வெளி நடப்பு செய்ததெல்லாம். தெரிந்திருக்கும். தொடர்ந்து 30 நாட்கள் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கல்வியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் வீட்டின் முன்பு போராடி, உடனடியாக100 பேராசிரி
அதேபோல இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அப்படிப்பு படித்தவர்கள் போதுமானதாக இல்லையே படித்தவர்கள் இல்லையே ” கிருஷ்ணசாமி என்ன செய்யலாம்” என்று அன்றைய முதல்வர் கேட்டார். ”பி.எஸ்.சி, எம்.எஸ்.சி படித்துள்ளவர்களை அப்பணிக்கு நிரப்புங்கள்” என்று சொன்னேன். அதில் பல ஆயிரம் இடங்கள் கிடைத்தது; செவிலியர் இடங்கள் கிடைத்தது. அப்போது தான் முதல் முறையாக தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் chief secretary ஆனார்; டிஜிபி ஆனார்; பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சேர்மன் ஆனார். இவ்வளவும் செய்து கொடுத்தோம். ஆனால், எந்த இடத்திலும் நாம் போஸ்டர் அடித்தது இல்லை; விளம்பரம் செய்ததில்லை. அந்த விளம்பரங்கள் எல்லாம் செய்யாவிட்டாலும் கூட, இன்று நம்முடைய கட்சி இவ்வளவு தூரத்திற்கு வலுவோடு நிலைத்து உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் நாம் உண்மையாக இருக்கிறோம் என்று எல்லா மக்களும் நம்புகிறார்கள், மக்களும் முழுமையாக விசுவாசமாக இருக்கிறார்கள்.
நான் தமிழக இளைஞர்களிடத்தில் முக்கியமாகக் கேட்டுக்கொள்வது நீங்கள் தேவையில்லாமல் ஆமைக்கறி இயக்குநர்கள் பாடும் சுய புராணத்தை நம்பி, வாட்ஸ் அப் போராட்டங்களை நம்பி, அவர்
’இந்து’ என்று நான் சொன்னதுடன் ”என்ன டாக்டர் கிருஷ்ணசாமி இங்கிருந்து ஆர்.எஸ்.எஸ் மாறிவிட்டார்? சங்கியாக மாறிவிட்டார்? முழு இந்துவாக மாறி விட்டாரா? நான் அப்படித்தான் இருந்தேன். நான் எப்பொழுது புதிதாக இந்துவாக மாறினேன். என்னுடைய அப்பா இந்து; என்னுடைய அம்மா இந்து; முன்னோர்கள் இந்து; தமிழ்ச் சமூகங்களுக்குள் எப்பொழுது சாதி இருந்தது. சிலப்பதிகாரத்தில் சாதி இல்லை. அன்று என்ன கூறியிருக்கிறார்கள்? எல்லா சமுதாயங்களிலும் கைவினைஞர்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவு தான். உழவர் என்று வருகிறது. கைவினைஞர்கள் என்று வருகிறதே தவிர, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, காலனி என்று எங்குமே கிடையாது. இடைப்பட்ட காலத்தில் நம்முடைய தமிழ் சமுதாயத்தில் சாதி என்பது ஊடுருவி விட்டது. அதற்காக இந்த சாதி என்ற ஒரு நோயை நாம் கடந்து செல்ல வேண்டும். நடந்து செல்லும் போது காலில் முள் குத்தி விட்டால் காலை வெட்டி விட முடியுமா? அப்படி ஒரு பாதிப்பு இருந்தாலும் கூட, சீழ் பிடிக்காமல் தடுக்க மருந்து எடுக்க வேண்டும் அல்லவா? மதமாற்றம் என்பது எங்கிருந்தோ யாராலோ எதற்காகவோ கொண்டுவரப்பட்டது. 1000 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மத்திய ஆசியாவிலிருந்து இஸ்லாமியர்கள் படை எடுக்கவில்லை என்றால் இங்கு இருக்கக்கூடியவர்கள் மதம் மாறி இருப்பார்களா? ஆங்கிலேயர்கள் இங்கே வந்து குடியேறவில்லை என்றால் டச்சுக்காரர், வரவில்லை என்றால், போர்ச்சிகீசியர்கள் வரவில்லை என்றால் கிறித்தவர்களாக மாறி இருப்பார்களா? ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கிருந்த வந்த காரணத்தினால், திணித்த காரணத்தினால் அச்சுறுத்திய காரணத்தினால் பல காரணங்களால் பல பேர் போயிருக்கிறார்கள். நான் அதில் தெளிவாக இருந்தேன். ஏன் நான் பிறந்த கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் குடும்பம் வெறும் 25 குடும்பங்கள் தான். பெரிதாக இல்லை. கொங்கு வேளாளர்கள் 100 குடும்பம், அரு
நமது தொடர் போராட்டங்களால் நம்மீது அரிஜன் என்ற முத்திரை பொயிற்று; ஆதி திராவிடர், தலித் என்ற முத்திரை போயிற்று; தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாளம் வந்திருக்கிறது. இந்துக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒற்றை அடையாளத்தின் வரக்கூடிய காலகட்டம் வந்தே தீரும். அதுதான் நம்முடைய லட்சியம். தமிழர்களை ஒன்றுபடுத்துவது, தமிழர்களை அடையாளப்படுத்துவது, இந்துக்களை அடையாளப்படுத்துவது. நம்பிக்கை என்பது வேறு. ஒரு இந்து இயேசுவை வணங்கக் கூடாது பொருளல்ல. கிறிஸ்தவர் அல்லாவை வணங்க கூடாது என்பது பொருளல்ல. ஏன் ஒரு பாடகர் யேசுதாஸ் ஒருவர் கிறிஸ்டியன் அவர் எப்படி ஐயப்பன் கோயில் சென்றார். எனவே நாம் நாமாக இருந்திட வேண்டும். நாம் நாமாக இருந்தால் கண்டிப்பாக எல்லா பெருமைகளும் வந்து சேரும். எல்லோருடனும் நேசமாகப் பழகவேண்டும். எல்லோரிடத்திலும் அன்பு. அரவணைப்புடன் செல்ல வேண்டும். உண்மையாக இருக்கவேண்டும் எல்லா மக்களுக்குமே வறுமை நீங்கி எல்லா மக்களும் வளம் பெற வேண்டும் என்று சொன்னால் எதிர்காலத்தில் புதிய தமிழகமும் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும். அது தனித்தோ, இணைந்தோ, பல கட்சிக் கூட்டணியும் காலத்தின் கட்டாயம். ஆனால் ஆட்சி – அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு நம்முடைய புதிய தமிழகம் கட்சியினர் அடுத்த இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அரசியலுக்கு வருகிறோம். அதற்காக நம்முடைய நேச சக்திகள் யா? நட்பு சக்திகள் யார்? என்பதை அடையாளம் கண்டு, அவர்களுடன் இணைந்து வாழக்கூடிய காலகட்டங்களிலே அது எந்த காலகட்டமாக இருந்தாலும் சரி, அந்த தேர்தலில் நாம் மகத்தான வெற்றியைப் பெறவேண்டும் என்று சொன்னால், கடந்த காலங்களையா போல தேர்தலுக்கு முன்பாக 10 நாள் 15 நாட்கள் பணிகள் கிடையாது. இனிமேல் ஒவ்வொரு நாளும் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் திராவிட மாடலை ஒவ்வொரு இடத்திலேயும் தோல் உரிக்க வேண்டிய இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ”திராவிடத்திற்கு மாற்று புதிய தமிழகம்; திராவிட மாடலுக்கு மாற்றாக புதிய தமிழகம் தான்” என்ற கருத்தை அதை மனதில் ஏந்தி நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எல்லோரும் பங்களிக்க வேண்டும் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்க வேண்டும்.
நம்முடைய 25 ஆண்டுக்கால சாதனைகளை இளைஞர்கள் இன்று மாநாட்டில் நேரடியாக பார்க்காவிட்டாலும் வீட்டிலிருந்து பார்த்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதைப் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று நீங்
நாம் 25 ஆண்டு காலத்தை நிறைவு செய்து அடுத்த பாய்ச்சலுக்கு அரசியல் – அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாய்ச்சலுக்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். எனவே நம்முடைய புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூக மாற்றத்தை உருவாக்கினோம். இந்த சமூக மாற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அரசியல் – அதிகாரம் வேண்டும். அரசியல் – அதிகாரம் வேண்டும் என்று சொன்னால் அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். அவருடைய ஆதரவைப் பெறுவதற்கு உண்டான பணிகளை செய்ய வேண்டும். யாரையும் பகையாக பார்க்காதே, யாரோடும் பகை கொள்ளாதே எல்லோரும் தமிழர்கள், எல்லோரும் இந்துக்கள் என்ற உணர்வுகளோடு, வறுமையை முற்றாக ஒழித்து, ஏழ்மையை முற்றாக ஒழித்து, ஏற்றத்தாழ்வுகளை முற்றாக ஒழித்து, தமிழ் சமுதாயத்தில் உள்ள இடைவெளிகளை மெல்ல மெல்ல குறைத்து எல்லாவற்றையும்