பட்டியலின பிரிவில் இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு…! தெலுங்கானாவை பார்த்தாவது திருந்தட்டும் தமிழ்நாடு.!

உள் இட ஒதுக்கீடு..!
பட்டியலின பிரிவில் இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு…! தெலுங்கானாவை பார்த்தாவது திருந்தட்டும் தமிழ்நாடு.!
பட்டியலின பிரிவில் இட ஒதுக்கீட்டில் எவ்வித பிரிவும் செய்யக்கூடாது என்பது ஒரு சிலரின் வாதம்.
அதற்குள் நான் வரவில்லை.
ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி எந்தவொரு சாதிக்கும் முன்னுரிமை கொடுக்காமல் முறையாக பிரித்துத் தரப்பட வேண்டும் என்பதற்கு ஏற்ப தற்போது தெலுங்கானா அரசு A,B,C என்று மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது.
இதில் எந்த சாதிக்கும் முன்னுரிமையும் இல்லை,உள் ஒதுக்கீடும் இல்லை.இருக்கும் சதவீதத்தை மூன்றாக பிரித்து வழங்கியுள்ளனர்.
தெலுங்கானாவை பார்த்தாவது தமிழக அரசு தங்களின் தவறான உள் இட ஒதுக்கீட்டு கொள்கையை கை விட்டுவிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இட ஒதுக்கீட்டை அனைவருக்கும் சமமாக வழங்கிட வேண்டும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD.,Ex MLA,
நிறுவனர் – தலைவர்
புதிய தமிழகம் கட்சி.