ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அண்ணலுக்கு அழிவில்லை! விளிம்புநிலை மக்களின் எழுச்சி நாயகர், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65-வது நினைவு நாளில் நினைவு கூர்வோம்!!
அறிக்கைகள்
451 Views
Published:
07 Dec 2021
![]()
ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அண்ணலுக்கு அழிவில்லை!
விளிம்புநிலை மக்களின் எழுச்சி நாயகர், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65-வது நினைவு நாளில் நினைவு கூர்வோம்!!
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாளில் உயர் பதவிகளை நாடிச் சென்றதில்லை. கோடானகோடி மக்களின் உயர்வுக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பெரும்பெரும் பதவிகளில் இருந்தவர்களைக் கூட நினைவு கூர்வதற்கு ஆள் இல்லாதபோது, எவ்விதமான உயர்பதவிகளையும் அனுபவிக்காத அண்ணல் அம்பேத்கர் அவர்களை, கோடானகோடி மக்கள் அவர்களின் உள்ளங்களில் வைத்து இன்றும் ஆராதிக்கிறார்கள். அண்ணலுக்கு மறையவில்லை; அவர் இன்றும் வாழ்கிறார்; என்றும் வாழ்வார்; ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் வாழ்வார்.
இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
6/12/2021






