தீபக் ராஜாவின் கொலை வழக்கில் குற்றவாளிகள் 14 பேருக்கும் ஜாமின்?!
செய்திகள்
423 Views
Published:
25 Sep 2024
![]()
நாங்குநேரி அருகே வாகைக்குளம் கிராமத்தை சார்ந்த தீபக் ராஜா என்ற இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் பட்டப்பகலில் திருநெல்வேலி கே.டி.சி நகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.
தீபக் ராஜாவின் கொலை வழக்கு குற்றப் பத்திரிக்கையை 90 நாட்களுக்குள்ளாக தாக்கல் செய்திருந்தால், குற்றவாளிகள் பிணையில் வெளியில் வந்திருக்க முடியாது. ஆனால், குற்றவாளிகளுக்கு உதவக்கூடிய வகையில் காவல்துறை அதிகாரிகள் மெத்தனத்துடன் செயல்பட்டதின் வாயிலாக கைது செய்யப்பட்ட 14 பேரும் கீழமை நீதிமன்றத்திலேயே விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். காவல்துறையினரின் இதுபோன்ற நடவடிக்கைகள் பெருத்த சந்தேகங்களை கிளப்புகின்றன மற்றும் குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. இதன் விளைவாகவே தென் தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.






