கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும்.
312 Views
![]()
பெறுநர்:
மாண்புமிகு திரு மு. க. ஸ்டாலின் அவர்கள்,
தமிழ்நாடு முதலமைச்சர்,
தலைமைச் செயலகம்.
சென்னை – 600 009.
அன்புடையீர், வணக்கம்!
பொருள்: கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும்.
கரோனா முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பெருந்தொற்று பணிக் காலத்தில் உயிரிழக்க நேரிட்டால் ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறீர்கள், அதை நான் வரவேற்கிறேன். ஆனால் இது எந்த விதத்திலும் போதுமானது அல்ல.
மருத்துவர்கள்; செவிலியர்கள்; தூய்மைப் பணியாளர்கள்; ஸ்கேன், எக்ஸ்-ரே, இரத்த பரிசோதனை கூட ஆய்வாளர்கள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தடுப்பு பணிகளை செவ்வனே செய்து வருகிறார்கள். 2020 ஜனவரிக்கு பிறகு, தற்போது வரையிலும் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் காவல்துறை, வருவாய் துறை, ஊடகத்துறை போன்ற பல துறைகளை சார்ந்தோரும் கரோனா தொற்றால் பணிக் காலத்தில் மரணம் எய்தியிருக்கிறார்கள்.
எனவே, உயிரிழந்த அனைவரையும் முன் களப்பணியாளர்களாகவே கருதி, அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு தலா ஒரு கோடியும், செவிலியர்கள் மற்றும் பிற துறையை சார்ந்தவர்களுக்கு குறைந்தது தலா ரூபாய் 50 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நகல்:
மாண்புமிகு திரு மா.சுப்பிரமணியன் அவர்கள்,
சுகாதாரத்துறை அமைச்சர்,
சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகம்,
தலைமைச் செயலகம்.
சென்னை – 600 009.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.05.2021






