தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!
அறிக்கைகள்
8 Views

Published:
12 May 2026
![]()
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!
……………………………………………………
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், துணைத் தலைவர் மு.ரவி சங்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் எனது நீண்டகால நண்பர். 2011 முதல் 2016 வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், அவரும் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மிகவும் இனிய நண்பரான அவர், இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். அவரது தலைமையின் கீழ் தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.05.2026







