நெருக்கடி நிலையின்போது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிய – லெனினிய பிரிவு) மாணவர் பிரிவின் அமைப்பாளர் பதவி வகித்து, கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக நெறிகளை மீறி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் கலைக்கப்பட்டபோது தி.மு.க, தி.க, ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களுக்கு புரட்சியாளர்களின் அறைகூவல் என்ற துண்டு பிரசுரம் அச்சிட்டு, வெளியிட்டு, கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் சிறைவாசம். ஆயுதம் தாங்கிய காவலர்கள் சூழ்ந்து நிற்க, மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ தேர்வு எழுதினார். பின் ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்று திரு. மொரார்ஜிதேசாய் அவர்கள் பிரதமராக பதவி ஏற்ற அன்று விடுதலை செய்யப்பட்டார்.