பரம்பிக்குளம் – ஆழியாறு உழவர்களுக்கான உரிமைப் போராட்டம் குறித்த தொடர் கட்டுரைகளை தலைவர் அவர்கள் தொடர்ந்து எழுதினார்கள். அந்த கட்டுரைகள் கோவை மாலை முரசு இதழில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தன. அன்றைய காலகட்டத்தில் அந்த கட்டுரைகளே போராட்டத்திற்கு மிகுந்த உத்வேகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.
செப்டம்பர் 11, கோவை மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக மக்களைத் திரட்டி புறம்போக்கு நில விவசாயிகள் மீதிருந்த தண்டத் தீர்வை உயர்வை கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் மனு அளித்தார்கள்.
அக்டோபர் 18, உடுமலை அருகே 100 கிராமங்களில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்களை தலைவர் அவர்கள் ஏற்பாடு செய்து நடத்தினார். அந்த முகாம்களில் 70 ஏழைத் தாய்மார்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அதில் 100% வெற்றி கண்டார்.
