இந்திய தேசத்தின் 75 ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாட ஆயத்தமாவோம்!
செய்திகள்
362 Views
Published:
13 Aug 2021
![]()
புதிய தமிழகம் கட்சியினர் அனைவரது கவனத்திற்கு
நமது இந்திய தேசத்தின் 75 ஆண்டு சுதந்திர தின விழாவை புதிய தமிழகம் கட்சி சார்பாக மக்களோடு மக்களாக நின்று கொண்டாட முடிவு செய்துள்ளோம். அதன் அடிப்படையில் கிராமம் தோறும் தேசிய கொடியை ஏற்றிடவும், அந்த நிகழ்ச்சியை சிறப்புற செய்திடவும் ஆயத்தமாகுமாறு புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியை எப்படி சிறப்புற கொண்டாடுவது, சுதந்திர தினத்தின் நோக்கத்தை மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது என்பது குறித்த தலைவரின் விரிவான அறிக்கை இன்று மாலை அனுப்பி வைக்கப்படும்.
எனினும், அதற்கான ஆயத்தப் பணிகளை இந்த நிமிடத்திலிருதே தொடங்குமாறு நமது நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
13.08.2021







