பெருந்திரளாக மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் பல லட்சம் மக்களை ஒன்று திரட்டி, 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமிட்டது
![]()
அக்டோபர் 12, திருச்சி – தஞ்சை மண்டலத்தில் குறிப்பிடும்படியான தளம் இல்லாவிட்டாலும் இதே மாநகர்ல் மாநாட்டையும் பேரணியையும் நடத்தியதன் மூலம் தம்முடன் மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார் ‘‘கிருஷ்ணசாமி…. யாருக்கும் பாதிப்புமின்றி ஒழுங்கான மாநாட்டுப் பேரணியை நடத்த முடியும். எத்தனை தலைவர்கள் வந்தாலும் தன்பக்கமும் எளிய (தலித்) மக்கள் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார் கிருஷ்ணசாமி’’ (தினமணி (மதுரை) 04-10-2000: பக்.9). இம்மாநாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் மனித உரிமைகள், சமுதாய அடையாளங்கள், சமுதாய நீதி, தொழிலாளர்கள் மற்றும் பொதுச் சிக்கல்கள் ஆகிய தலைப்புகளில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.