சட்டவிரோத பார்களை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு
செய்யவும், அவர்களிடமிருந்து அபராத தொகையை வசூல் செய்யவும், கள்ள மது விற்பனையைத் தடை செய்யவும் வேண்டி கோவை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலால் வரி துறை அதிகாரி ஆகியோரிடம் புகார் மனு‌ அளிக்கப்பட்டது.