இன்றுவரை தமிழ்நாட்டில் தேவேந்திர குல மக்கள் மீதும், பிற ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள் மீதும் தீண்டாமை பல வடிவங்களில் அமுலாக்கப்பட்டு வருகிறது. அதை ஒழித்துக் கட்ட இம்மாநாடு கீழ்க்கண்ட திட்டங்களை முன் வைக்கிறது.

அ) தமிழக அரசும், காவல் துறையும், தீண்டாமைக் கொடுமைக்கு ஆதரவாக இருப்பதால், இனி தீண்டாமை ஒழிப்பு போரை பொதுமக்களே கையிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆ) தீண்டாமை பாவிக்கப்படும் கிராமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பிற கிராமத்து மக்கள் ஒத்துழைத்து இணைந்து போராடி தீண்டாமை செயல்களை அறவே ஒழிக்க வேண்டும்.

இ) தனி டம்ளர்களை வைத்திருக்கும் டீ கடைகள் அடித்து நொறுக்க வேண்டும்.

ஈ) கிராமப் புறத்துக் கோயில்களில், தீண்டத்தகாதவர் உள்ளே நுழையக் கூடாது என்று இருக்கும் கோயில்களுக்குள், உள்ளூரிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களை, அழைத்துச் செல்ல, எத்துணை தடைவரிலும் தகர்த்து எறியவேண்டும்.

உ) கிராமப்புறத்து பொதுக் கிணறுகள், பொதுக் குளங்கள், பொதுக் குழாய்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள கிராமங்களில், அதை ஆதிக்க சாதிகளும் பயன்படுத்த விடாமல் போய்த் தடுக்க வேண்டும்.

ஊ) கிராமப் புறங்களில், ஆதிக்க சாதியினர் வாழும் தெருக்களில், நமது மக்கள் செருப்புப் போட்டுக் கொண்டு போக அனுமதி மறுக்கப்பட்டால் அனுமதி மறுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களின் செருப்புக்களையும் பறித்தெடுக்க வேண்டும்.

எ) ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள் மத்தியல் எழவு சேதி சொல்ல, குழி வெட்ட, மலம் எடுக்க,பறையடிக்க, செருப்பு தைக்க போகின்ற பழக்கங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஏ) பள்ளன், பறையன், சக்கிலியன் என்று இழிவாக அழைத்தலை, அரசு அட்டவணையிலிருந்து நீக்க வேண்டும். தேவேந்திரர், ஆதிதிராவிடர். அருந்ததியர் என்று அழைக்கப்பட வேண்டும்.

ஐ) வன்முறை நம் மீது கட்டவிழ்த்துவிடப்படும் போது 1989ன் கொடுமை தடுப்புச் சட்டமும் 1995 விதிகளும்படி சாதி வெறியரின் துப்பாக்கிகளை பறித்து நமக்கு துப்பாக்கி வழங்க வேண்டும். கிராமத்திலும் தற்காப்பு படைகளை நிறுவிக் கொள்ள வேண்டும்.

2) தேவேந்திர குல வேளாளர் மக்கள், தங்களை அடிமைப்படுத்தியுள்ள அரசியல் கட்சிகளிலிருந்து விலகி, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் அணி திரண்டு, பல நூறு ஆண்டுகால அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற போராட வேண்டும்.

3) தமிழ் மண்ணில், மண்ணின் மைந்தர்களாக உழவுத் தொழிலின் முதுகெலும்புகளாக இருப்பவர்கள் தேவேந்திர குல மக்கள். இந்த உழவர் கூட்டத்தை அடக்கி ஆளத் தொடங்கினார்கள், உழைப்பை மறுக்கும் உன் மத்தர் கும்பல்கள். இந்த நிலையில் தேவேந்திர குல மக்கள் இன்று அதிகாரம் இழந்து இருக்கிறார்கள்.

4) 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சுதந்திரம் தேவேந்திர குல மக்களாகிய நமக்கு வந்தடையவில்லை. 50 விழுக்காடு நிலமற்ற, விவசாயக் கூலிகளாக இருந்த நமது மக்கள், 48 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 90 விழுக்காடு நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக, நாளுக்கு நாள் திவாலா ஆகிய நிலை உருவாகியுள்ளது.

சட்ட ரீதியான அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கூலி கூட அமுலாக்கப்படவில்லை. நமது மக்கள் வாழும் பகுதிகளில் குடிநீர் கிடைப்பதற்குக் கூட வழி வகை செய்யப்படவில்லை. இன்றளவும் கூரை வாய்ந்த வீடுகளிலேயே வாழ்கின்ற நிலை உள்ளது. மனை நிலத்திற்கு பட்டா இல்லாதவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். பாசன வசதி உள்ள நிலங்கள் அன்றாடம் நமது மக்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. நில முதலைகள் மட்டுமல்லாமல், அரசு அதிகாரிகளாலும், சமூக நலக்காடுகள், காட்டிலாகா ஆகிய பெயர்களில் நமது மக்கள் அனுபவித்து வரும் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. புறம்போக்கு நிலங்கள் கூட பண்ணையார்களாலும் திடீர் பணக்காரர்களாலும் கபளீகரம் செய்யப்படுகின்றன.

தேர்தல்கள் மூலம் தனித்தொகுதிகளில் ”நமது மக்களின் உரிமைக்காக” என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கே தாங்கள் சார்நதிருக்கின்ற கட்சிகளின் அடிமைகளாக உருமாற்றப்படுவதால் நமது மக்களுக்கு முழுமையான துரோகம் இழைத்து நிற்கிறார்கள். அத்தகைய முறையில்தான் இன்றைய பொதுவாக்காளர் தொகுதிகளாக தனித்தொகுதிகள் செயல்படுகின்றன. இதனால் உண்மையான தேவேந்திர குல, ஆதிதிராவிடர், அருந்ததியர் பிரதிநிதிகள் இத்தகைய தேர்தல் முறை மூலம் மன்றங்களுக்கு அனுப்பப்படுவது நடைபெறுவதில்லை.

5) தென் மாவட்டங்களில் காவல் துறையில் ஆதிக்க சாதி ஒன்றின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், சமூகத்தின் சகஜநிலை கெட்டு வருகிறது. ஆகவே உடனடியாக காவல் துறையில் சமபங்களிப்பு நிலவும் வகையில் மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.

6) தேவேந்திர குல மக்களின் போராட்டத்தின் விளைவாக அறிவிக்கப்பட்ட மாவீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்தின் பெயரை மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரன் போக்குவரத்ததுக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆதிக்கவாதிகளை எதிர்த்து குரலெழுப்பிய தியாகி இமானுவேல் சேகரின் நினைவாக அவரது உருவச்சிலையை மதுரையில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு விரைவில் நிறுவும்.

7) உழவர் மக்களாகிய தேவேந்திரர் மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலமும், பாசன வசதிகளும் வழங்க வேண்டும். இந்த இனம் சொந்தக் கால்களில், சுய மரியாதையுடன் தான் நிற்பது மட்டுமல்லாமல், இந்த நாட்டின் விவசாய உற்பத்தியையே மேம்படுத்த அதுவே வழி என்று இந்த மாநாடு உரத்த குரலில் எதிரொலிக்கிறது. சட்ட ரீதியாக தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, நிலத்திருடர்களிடமிருந்து பறித்தெடுத்து, தலித் மக்களுக்கே வழங்க வேண்டும்.

8) கொடியன்குளம், காசிலிங்காபுரம், ஆலந்தா, மலைப்பட்டி காவல்துறை அட்டூழியங்கள் மீது சி.பி.ஐ. விசாரணை கோரி போராடி வரும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பையும், அதன் மக்கள் இயக்கத்தையும் நசுக்க தமிழக அரசு முயன்று வருகிறது. நான்கரை ஆண்டு காலமாக தேவேந்திர மக்களை அடக்கியும். துப்பாக்கியால் சுட்டும், நிலங்களைப் பறித்தும், கொள்ளையடித்தும் சூறையாடிய ஜெ-சசிகலா கும்பல் ஆதிக்கம் அடியோடு தூக்கியெறியப்பட வேண்டும். வருகின்ற தேர்தலில், இந்த ஆதிக்க சாதி வெறிக் கும்பலைத் தோற்கடிக்குமாறு தமிழக மக்களை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள் ஆகியவை நமது மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தரத்தக்கதாக நடத்தப்படுவதில்லை, அவை நமது மக்களுக்கு சுடன் வழங்கவோ, பொருளாதார மேம்பாட்டிற்கோ, சுய தொழில் வாய்ப்புக்கோ. பல நிபந்தனைகள் போட்டு பயன்படுத்த முடியாமல் தடுத்து விடுகின்றன.

அரசு உதவியாக பல கோடி ரூபாய்களைப் பெற்று பின், தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு தொழில் துவங்க அனுமதி பெற்ற தனியார் தொழிற்சாலைகள் நமது மக்களை பணிகளில் சேர்ப்பதில்லை. இட ஒதுக்கீட்டையும் அமுலாக்குவதில்லை,

சமூகத்தில் தீண்டாமை நிலவுவதால், நமது மக்கள் பொது இடங்களில் வர்த்தகம் செய்ய தடையாக உள்ளது. ஆகவே, நகரங்களும் பிற வளர்ச்சித் திட்டங்களும் நமது மக்களது பங்களிப்பைத் தவிர்த்தே நடந்து வருகின்றன.

நமது பெண்கள் இழிவுபடுத்தப்படுவது, சமகூலி மறுக்கப்படுவது. பலாத்காரம் செய்யப்படுவது போன்ற சித்திரவதைகட்கு சாதி வெறிபிடித்த ஆண் ஆதிக்கவாதிகளால் உள்ளாக்கப்படுகிறார்கள்.

வளர்ச்சிப் பணித் திட்டங்கள், நமது மக்கள் வாழும் பகுதிகட்கு சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளிக்கூடம், நூலகம், ரேஷன்கடை, பொதுக் கிணறு. மருத்துவமனை ஆகியவற்றை மறுத்து, ஆதிக்க சாதியினரது குடியிருப்பு பகுதிகட்கு மட்டுமே செய்யப்படுகின்றன. நமது மக்களுக்கு என்று ஒதுக்கப்படும் தொகையும், ஆதிக்க சாதி காண்டிராக்டர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது.

காவல்துறையில், ஆதிக்க சாதியினரது திட்டமிட்டு நுழைக்கப்பட்ட ஆதிக்கம் ஒவ்வொரு காவல் நிலையமும் நமது மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்ற நிலைமையை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் நம் மீது பொய் வழக்கு போடுதல். சிறய பிரச்சினையையும் நமக்கெதிராகப் பெரிதாக திருப்புவது, நமது மக்களது சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது, சாதி வெறியர்கட்கு பாதுகாப்பு கொடுப்பது நமது மக்களிடையே பீதியைக் கிளப்புவது ஆகிய வேலைகளைச் செய்து வருகிறது.

நீதித்துறையோ ஏழையின் செயல் அம்பலம் ஏறாது என்ற பழமொழிக்கொப்ப. நமது மக்கள் அணுகவே முடியாத இடமாக இருக்கிறது. அப்படியே அணுகினாலும், நமது மக்களின் நிலைமை, உணர்வுகள் பற்றி புரிந்து கொள்ள முடியாத, ஆதிக்கவாதிகளின் நியாயங்களை போதிக்கின்ற கூடமாக அதை மாற்ற முயல்கிறார்கள்.

மேற்கூறிய பிரச்சினைகளை எதிர்கொள்ள சட்டமன்ற, நாடாளுமன்றங்கட்டு, உண்மையான மக்கள் பிரதிநிதிகளை அனுப்பிவைக்க தனி வாக்காளர் தொகுதிகளை கொண்டு வர வேண்டும். இதை மத்திய அரசின் கவனத்திற்கு இத்த மாநாடு கொண்டு வருகிறது.

தொடர்ந்து நமது மக்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளைத் தவிர்க்கவும். சாதி வெறியர்களுடன் சுமூக நிலையில் இனி வாழ முடியாது என்ற நிலைமை உருவாகிவிட்டதால், எங்கள் மண்ணை எங்களுக்குப் பிரித்துக் கொடு, தனித்து நாங்கள் வாழ்ந்து, நாகரீகத்தின் அனைத்து வளர்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும். எங்கள மக்கள் மேம்பட வேண்டும். அதற்கு தேவேந்திரர் தேசம் என்ற தனி மாநிலத்ததை, இந்திய அரசியல் சட்டம் 371-வது பிரிவின் கீழ், மத்திய அரசின்நேரடி பார்வையில் மாநிலம் ஒன்று அமைத்துக் கொடு, அதைப் போராடி பெற 1 லட்சம் இளைஞர்களும் யுவதிகளும் தயாராய் இருக்கிறார்கள்.